Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தருமபுரியை நோக்கி நகரும் ஜெயலலிதா புயல்

தருமபுரியை நோக்கி நகரும் ஜெயலலிதா புயல்

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (23:13 IST)
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தருமபுரியில் நடைபெற உள்ள அதிமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
 

 
தமிழக சட்ட சபைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக வேட்பாளர்களுக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு திரட்டி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா.
 
கடந்த 9 ஆம் தேதி, சென்னை தீவுத்திடலில் நடந்த பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி, தன்னையும் சேர்த்து 21 அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்தார்.
 
இந்த நிலையில், ஏப்ரல் 13 ஆம் தேதி அன்று, முதல்வர் ஜெயலலிதா தருமபுரியில் நடைபெற உள்ள பிரம்மாண்ட அதிமுக தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு கேட்க உள்ளரா்.
 
அடுத்து, வரும் 15 ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments