Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா வாயை திறந்தால் பச்சைபொய்: சொல்வது யார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 10 மே 2016 (11:25 IST)
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வாயிலிருந்து வருவதெல்லாம் பச்சைபொய் என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.


 
 
இந்த தேர்தலில் குஷ்பு போட்டியிடவில்லை என்றாலும் அவருக்கு மவுசு அதிகமாகவே உள்ளது. முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார் என அவ்வப்போது வதந்திகள் வந்து அவை புஷ்வானமாக போவிட்டது.
 
தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும் இடம் எல்லாம் ஜெயலலிதாவை குஷ்பு விமர்சிக்க தவறுவதில்லை. அரசியல் ரீதியாக ஜெயலலிதாவை விமர்சித்து வரும் குஷ்பு தற்போது கவிதையை போல பச்சை, பச்சை, பச்சை என தொகுத்து விமர்சித்துள்ளார்.
 
ஜெயலலிதாவின் சின்னம் இரட்டை இலை. அதன் நிறம் பச்சை. அவர் உடுத்தும் உடை பச்சை. அவர் வாயிலிருந்து வரும் வார்தைகளும் பச்சைபொய் என குஷ்பு ஜெயலலிதாவை பற்றி பேசியிருக்கிறார்.
 
மேலும், தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லையென்று மற்றொரு பொய் சொல்கிறார் ஜெயலலிதா. இன்றும் தமிழகத்தின் கிராமங்களிலும் சிற்றூர்களிலும் ஏன் சென்னையிலும் கூட இரண்டு மணி நேரம் மின் தடை உள்ளதுதானே என்றார் குஷ்பு.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments