Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பயணம் ஒத்திவைப்பு!

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பயணம் ஒத்திவைப்பு!
, சனி, 4 ஜூலை 2015 (19:51 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று மேற்கொள்ளவிருந்த கொடநாடு பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 
அண்மையில் நடைபெற்ற  சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், முதல்வர் ஜெயலலிதா 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இன்று (சனிக்கிழமை) கோட்டையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
 
எம்.எல்.ஏ. பதவியேற்பு உள்ளிட்ட ஒரு சில நிகழ்ச்சிகளை முடித்த பிறகு, முதல்வர் ஜெயலலிதா நீலகிரி மாவட்டத்தில் கொடநாடு எஸ்டேட் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அவரது கொடநாடு பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரச் செய்திகள் கூறுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil