Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதா தண்டனைக்கு எதிராக போஸ்டர்: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதா தண்டனைக்கு எதிராக போஸ்டர்: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
, புதன், 8 அக்டோபர் 2014 (19:43 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிரான பேனர்கள், போஸ்டர்கள் பற்றி விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
திமுக, பாமக, மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
 
நவம்பர் 11 ஆம் தேதிக்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், வேலூர் மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
 
ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக வேலூர் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil