அதிமுக எம்.பிக்களுடன் முதல்வர் ஜெயலலிதா திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடர் நம்பர் 26 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் என்ன பேசுவது என்றும் எப்படி பேசுவது என்றும் முதல்வர் ஜெயலலிதா சில குறிப்புகளை கொடுத்ததாக கூறப்படுகிறது.