Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தான் படித்த வகுப்பறையில் வாக்களித்தார் ஜெயலலிதா

தான் படித்த வகுப்பறையில் வாக்களித்தார் ஜெயலலிதா
, திங்கள், 16 மே 2016 (10:48 IST)
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தான் படித்த ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வகுப்பறையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை அளித்தார்.


 
 
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 6.30 மணியளவில் தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் அனைவரும் விருவிருப்பாக வக்களிக்க தொடங்கினர்.
 
காலை 7.18 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி கோபலாபுரத்தில் உள்ள சாரதா நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கைச் செலுத்தினார்.
 
நடிகர் அஜித் அடையாறில் உள்ள வாக்குச்சவாடி ஒன்றில் தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர் படித்த ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வகுப்பறையில் உள்ள வாக்கு எந்திரத்தில் தனது வாக்கைச் செலுத்தினார். ஜெயலலிதா ராகுகாலம் போனதும் வந்து வாக்களித்ததாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆயுத ஏற்றுமதி 200 கோடி டாலர்களாக அதிகரிக்க அரசு திட்டம் - மத்திய அமைச்சர்