43 கோடி ரூபாய் செலவில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம்?

Webdunia
வெள்ளி, 2 மார்ச் 2018 (11:24 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு 43 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது.
 
2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு பின்புறம் நல்லடக்கம் செய்யப்பட்டது. 
 
இதனையடித்து மெரினாவில் ஜெயலலிதாவிற்கு நினனவிடம் அமைக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது. அதன்படி பொதுப்பணித்துறை நினைவிடம் கட்டுவது தொடர்பான வரைபடத்தை தயாரித்ததாகக் கூறப்படுகிறது. அந்த வரைப்படத்திற்கேற்ப குறைந்த செலவில் நினைவிடம் கட்டித்தர நிறுவனங்களை தேர்வு செய்வதற்காக அரசு டெண்டர் விட்டுள்ளது.
 
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி கன்ஸ்ட்ரக்க்ஷன்ஸ் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஜெயலலிதாவிற்கு 43 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கப்பட உள்ளததாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments