Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பக்ரீத் பண்டிகை: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2015 (21:23 IST)
பக்ரீத் பண்டிகைய முன்னிட்டு, இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

 
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:-
 
தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளை இறையுணர்வுடன் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தனக்கு ஒரே மகன் என்ற நிலையில்கூட, இறைவனின் கட்டளையை ஏற்று, இஸ்மாயிலை தியாகம் செய்ய முன் வந்தார் இறைத்தூதர் இப்ராஹிம். அவரின் அந்த தியாகத்தை நினைவு கூறும் தினமே பக்ரீத் திருநாளாகும்.
 
இந்த புனித நாளில், பசித்தவர்களுக்கு உணவும், துன்பப்படுபவர்களுக்கு உதவியும், எளியவர்களிடம் கருணை காட்ட வேண்டும் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால், உலகில் நிச்சயம் அமைதி நிலவும். வளம் பெருகும்.
 
உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்க வேண்டும். அனைவரும் மனிதநேயத்துடனும், சகோதரத்துவத்துடனும், தியாகச் சிந்தனையுடனும் வாழ்வேண்டும்.
 
இந்த இனிய நாளில், இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments