Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிருக்கு போராடிய ஜெயலலிதா: போயஸ் கார்டனில் விருந்து!

உயிருக்கு போராடிய ஜெயலலிதா: போயஸ் கார்டனில் விருந்து!

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2016 (09:57 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். அன்று அவர் அப்பல்லோவில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நேரத்தில் அவரது இல்லமான போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் சசிகலா உறவினர்கள் விருந்து சாப்பிட்ட தகவல் வெளியாகி உள்ளது.


 
 
ஜெயலலிதாவின் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு உயர் பெண் போலீஸ் அதிகாரி இது குறித்து விவரித்துள்ளார். 5-ஆம் தேதி மாலை வரிசையாக காரில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் சசிகலாவின் உறவினர்கள், இளவரசியின் உறவினர்கள் வந்து இறங்கினார்கள்.
 
அவர்களை உள்ளே விட குழப்பமாக இருந்ததால் நாங்கள் சசிகலாவுக்கு போன் செய்து கேட்டோம். அனுமதியுங்கள் என அவர் உத்தரவிட்டார். அவர்கள் அனைவருமே இனிமேல் பாயஸ் கார்டன் பக்கமே வர கூடாது என ஜெயலலிதாவால் சில வருடங்களுக்கு முன்னர் எச்சரிக்கப்பட்டவர்கள்.
 
வீட்டிற்குள் வந்த அவர்கள் சுற்றுலா தளம் போல வீடை சுற்றி பார்த்தனர். மேக்கப் அறைக்குள் சென்று அலங்கரித்து கொண்டனர். அவர்களுக்கு உணவு தயாரானது. அவர்கள் தங்களுக்கு தேவையானதை சமைக்க சொல்லி இஷ்டப்படி சாப்பிட்டார்கள்.
 
ஜெயலலிதா அபாயகட்டத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் நாங்கள் யாரும் சாப்பிடாமல் சோகத்தில் இருந்தோம் என அந்த பெண் போலீஸ் அதிகாரி கூறினார். ஆனால் சசிகலா, இளவரசியின் உறவினர்கள் அவரது வீட்டிலேயே விருந்து சமைக்க சொல்லி சாப்பிட்டிருக்கிறார்கள். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments