Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவுக்கு தேர்தல் பயம் வந்த விட்டது: கனிமொழி

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2016 (15:34 IST)
ஜெயலலிதா தேர்தல் பயம் வந்த பிறகு படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவேன் என கூறுகிறார் என்று திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கூறியுள்ளார்.


 


இது குறித்து கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஜெயலலிதா, மக்களின் கோரிக்கை, மாணவர்கள், பெண்களின் போராட்டங்களுக்கு பிறகு கூட மதுவிலக்கு அமல்படுத்த மாட்டேன் என்றார்.
 
தேர்தல் பயம் வந்த பிறகு படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவேன் என கூறுகிறார். இதை யாரை ஏமாற்ற பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.
 
நிச்சயமாக மக்கள் இதை நம்பத் தயாராக இல்லை. சில்லரை வணிகத்தின் வழியாக அரசாங்கம் மதுவிற்கலாம் என்பதை கொண்டு வந்ததே ஜெயலலிதாதான்.
 
இதனால்தான் மதுக்கடைகள், மது பழக்கம் அதிகரித்தது. இதனால் மதுவிலக்கு பற்றி பேச அவருக்கு தகுதி இல்லை. இவ்வாறு கனிமொழி கூறினார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments