Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதாவுக்கு தேர்தல் பயம் வந்த விட்டது: கனிமொழி

ஜெயலலிதாவுக்கு தேர்தல் பயம் வந்த விட்டது: கனிமொழி
, திங்கள், 11 ஏப்ரல் 2016 (15:34 IST)
ஜெயலலிதா தேர்தல் பயம் வந்த பிறகு படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவேன் என கூறுகிறார் என்று திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கூறியுள்ளார்.


 


இது குறித்து கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஜெயலலிதா, மக்களின் கோரிக்கை, மாணவர்கள், பெண்களின் போராட்டங்களுக்கு பிறகு கூட மதுவிலக்கு அமல்படுத்த மாட்டேன் என்றார்.
 
தேர்தல் பயம் வந்த பிறகு படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவேன் என கூறுகிறார். இதை யாரை ஏமாற்ற பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.
 
நிச்சயமாக மக்கள் இதை நம்பத் தயாராக இல்லை. சில்லரை வணிகத்தின் வழியாக அரசாங்கம் மதுவிற்கலாம் என்பதை கொண்டு வந்ததே ஜெயலலிதாதான்.
 
இதனால்தான் மதுக்கடைகள், மது பழக்கம் அதிகரித்தது. இதனால் மதுவிலக்கு பற்றி பேச அவருக்கு தகுதி இல்லை. இவ்வாறு கனிமொழி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil