Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து திமுக மேல்முறையீடு

Webdunia
திங்கள், 6 ஜூலை 2015 (12:28 IST)
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து திமுக மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
 
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து, நீதிபதி சி.ஆர். குமாரசாமி அளித்த தீர்ப்பில் பல்வேறு அடிப்படை தவறுகளும், கணித பிழைகளும் இருப்பதாக வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா  உள்பட 4 பேரை விடுத்து கர்நாடக  உயர்நீதிமன்றம் கடந்த மே 11ம் தேதி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசு கடந்த ஜூன் மாதம் 23 அன்று மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
 
இந்நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பாக மேல்முறையீட்டு மனுவை இன்று  தாக்கல் செய்துள்ளார். உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் வழக்கறிஞர் வி.ஜி பிரகாசம் மேல்முறையீட்டு மனுவை அளித்தார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments