Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு: கருணாநிதி வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

Webdunia
சனி, 27 செப்டம்பர் 2014 (15:17 IST)
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு காரணமாக அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கத்துடன் திமுக தலைவர் கருணாநிதியின் வீடு, அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியுள்ளது. எனவே, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீடு, அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
இது குறித்து திமுக பொது செயலாளர் அன்பழகன் கூறும்போது, "திமுக தலைமை தமிழக காவல்துறையிடம் கேட்டுக்கொண்டதன்படி தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம், அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது" என்றார்.
 
இதனிடையே போயஸ் கார்டனில் முதல்வர் ஜெயலலிதா வீட்டருகே 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் குவிந்து தீர்ப்பு வெளியாவதற்கு முன்னரே இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் சுப்பிரமணியன் சுவாமி, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் போஸ்டர்களை கிழித்தெரிந்தனர்.

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

Show comments