Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா பதவியேற்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

Webdunia
வெள்ளி, 22 மே 2015 (14:35 IST)
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பதவியேற்க எதிர்ப்பு தெரிவித்து, திருச்சியில் போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 
 
திருச்சியில், மக்கள் கலை இலக்கிய கழகம், பெண்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேந்தவர்கள், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பதவியேற்க எதிர்ப்பு தெரிவித்து, திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகே திடீர் போராட்டம் நடத்தினர்.
 
இந்த தகவல் அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். திருச்சி கண்டோன்மென்ட் காவல்துறை ஆய்வாளர் உமாசங்கர், போராட்டம் நடத்தியவர்களை, வலுக்கட்டாயாக கைது செய்தனர்.
 
போராட்டம் நடத்திய பகுதி திருச்சி மத்தியபேருந்து நிலைய பகுதி என்பதால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

Show comments