Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 2 நாட்கள் மருத்துவமனையில் ஜெ : பின்னணி என்ன?

இன்னும் 2 நாட்கள் மருத்துவமனையில் ஜெ : பின்னணி என்ன?

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2016 (08:48 IST)
உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்னும் 2 நாட்களுக்கு அங்கேயே இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்வார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன் தினம் இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சரியாகிவிட்டாலும் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.
 
அவர் தனது வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்வதாக, மருத்துவ வட்டாரங்கள் நேற்று கூறின. எனவே, நேற்று மாலை அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இன்னும் 2 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 
அதாவது, முதல் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு ரத்த பரிசோதனை, ஸ்கேன் என மொத்தம் 12 பரிசோதனைகள் செய்யப்பட்டதாம். அவற்றில் ஒரு சிலவற்றின் முடிவுகள் மட்டுமே மருத்துவர்களுக்கு கிடைத்துள்ளது. மற்ற பரிசோதனையின் முடிவுகள் தெரிய வர 48 மணி நேரம் ஆகும் என்பதால், அவர் அங்கேயே தங்க வேண்டியுள்ளதாம்.
 
எனவே இன்று இரவு அல்லது நாளை(செப்.25) அனைத்து பரிசோதனைகளின் முடிவும் தெரிந்த பின்பு அவர் வீட்டிற்கு திரும்புவார் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments