Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவிற்கு வீட்டு சாப்பாடு; நடக்க பயிற்சி : விரைவில் வீடு திரும்புவார்?

ஜெயலலிதாவிற்கு வீட்டு சாப்பாடு; நடக்க பயிற்சி : விரைவில் வீடு திரும்புவார்?

Webdunia
ஞாயிறு, 6 நவம்பர் 2016 (10:42 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


 

 
உடல் நலக்குறைவு காரணமாக, முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  காய்ச்சல், நுரையீரல் தொற்று, சுவாச பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு லண்டன் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். 
 
அதன் காரணமாக, அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அவருக்கு செலுத்தப்பட்டிருந்த சுவாச கருவிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது சுலபமாக சுவாசிக்கிறார் என்றும், அவர் சுயநினைவுடன் தன்னை சுற்றி நடப்பவைகளை உணர்ந்து கொள்வதாகவும், அவருக்கு தேவையான உணவை அவர் கேட்டு சாப்பிடுகிறார் என்றும் அப்பல்லோ நிறுவனர் பிரதாப்ரெட்டி சமீபத்தில் கூறினார். மேலும்,  எப்போது வீடு திரும்புவது என்று அவரே முடிவு செய்வார் என்றும் கூறினார். 
 
அதேபோல் அவர் விரும்பு உணவு வகைகள், போயஸ் கார்டனிலிருந்து வரவழைக்கப்பட்டு அவருக்கு அளிக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
 
தற்போது அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தற்போது அவருக்கு எழுந்து உட்காருவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் நடப்பதற்கும் அவருக்கு பயிற்சி அளிக்கப்படும். அவர் இயல்பாக நடக்கத் தொடங்கிய பின், வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
முதல்வரின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், மருத்துவர்களுக்கும், அப்பல்லோ வாசலில் காத்திருக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments