Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக உறுப்பினர்கள் சட்டசபையிலிருந்து வெளியேற்றம்

Webdunia
புதன், 6 ஆகஸ்ட் 2014 (16:48 IST)
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பேசும் போது குறுக்கிட்டு பேசியதால் தேமுதிக உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
 
தமிழக சட்டப்பேரவையில் சட்டம் ஒழுங்கு குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று தேமுதிக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது, சட்டம் ஒழுங்கு குறித்து பேச தேமுதிக உறுப்பினர்களுக்கு தகுதி இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
 
மேலும், தேமுதிக எம்எல்ஏக்கள் மீது உள்ள வழக்குகளின் பட்டியலையும் முதல்வர் வாசித்தார்.
 
அப்போது முதல்வர் பேசுவதற்கு குறுக்கீடு செய்யும் வகையில் தேமுதிக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பினர். இதனால், அவர்களை அவையில் இருந்து வெளியேற்றுமாறு அவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார்.
 
அவைக்கு வெளியே வந்த தேமுதிகவினர் தொடர்ந்து கோஷம் எழுப்பியவாறு இருந்தனர்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments