தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 50 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அதன் காரணமாக அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் வெகு நேரம் நாற்காலியில் அமர்ந்திருப்பதாகவும், அப்படி உட்காரும் போது ‘ டிரக்கியாஸ்டமி’ சிகிச்சை முறையில் மேற்கொள்ளப்படும் செயற்கை சுவாச குழாய் இல்லாமல், அவர் இயல்பாகவே சுவாசிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், அவர் விரும்பும் உணவுகள், போயஸ் கார்டனில் சமைக்கப்பட்டு அவருக்கு வழங்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு அதிமுக தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!