''ஜெயலலிதாவை காப்பாற்றியிருக்க முடியும்'' - ஆறுமுக சாமி அறிக்கையில் தகவல்

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (15:09 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க  நீதிபதி ஆறுமுகம்சாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து அறிக்கை சமந்துள்ள நிலையில், இதில், குறிப்பிட்ட  அறுவை சிகிச்சை செய்திருந்தால் அவரது உயிரை காப்பாற்றியிருக்க முடியும் என தகவல் வெளியாகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி முதலமைச்சர் ஜெயலிதா மரணம் அடைந்தார்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது என்பதும், இந்த ஆணையம் ஒரு சில ஆண்டுகளாக விசாரணை செய்து சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை அறிக்கையில் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா, விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், சிவகுமார் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்கிறது என்றும் எனவே அவர்கள் மீது விசாரணைக்கு பரிந்துரைத்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த விசாரணை அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்  வெளியாகி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ALSO READ: ஜெயலலிதாவுக்கு ரத்தவெள்ளத்தில் வார்டில் வைத்து அறுவைசிகிச்சை - முன்னாள் தலைமைச் செயலாளர் சாட்சியம்
 
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இதயத்தில் 14மிமீ., மேல் வெஜிடேசசன் இருந்ததாகவும், ஒரு நோயாளிக்கு 10 மிமீ மேல் வெஜிடேசன் கண்டறியப்பட்டால் குறிப்பிட்ட காலத்திற்குள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்து மூலம் கரைக்கபடாவிட்டால் அதற்கு அறுவைச் சிகிச்சை மாற்றுத் தீர்வு என மருத்துவமனை  நெறிமுகளின்படி கூறப்படும் நிலையில், அப்போலோ மருத்துவமனை அறுவைச்சிகிச்சை செய்து ஜெயலிதாவுக்கு வெஜிடேசனை அகற்றியிருந்தால் அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments