Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’ஜெயலலிதாவும், கருணாநிதியும் தன்னைவிட யாரையும் பெரியவராக்க விடாதவர்கள்’ - விஜயகாந்த்

’ஜெயலலிதாவும், கருணாநிதியும் தன்னைவிட யாரையும் பெரியவராக்க விடாதவர்கள்’ - விஜயகாந்த்
, சனி, 17 அக்டோபர் 2015 (18:14 IST)
ஜெயலலிதாவும், கருணாநிதியும் தன்னைவிட யாரையும் பெரியவராக்க விடாதவர்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 

 
தேமுதிக சார்பில் நேற்று திருத்தங்கல் பகுதியில் பட்டாசு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட வழங்கும்விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
 
அதில் கலந்துகொண்டு பேசிய விஜயகாந்த், “தமிழகத்தில் 4 ஆண்டு களில் விலைவாசி உயர்ந் துவிட்டது. 2016-ல் ஜெயலலிதாவை முதல்வராக விடமாட்டேன். கூட்டணிக்கு இன்னும் நேரம் உள்ளது. அப்போது பார்த்துக்கலாம். தன்னைவிட யாரையும் பெரியவராக்க விடாதவர்கள் ஜெயலலிதாவும், கருணாநிதியும்.
 
சீனப் பட்டாசு எப்படி வந்தது? எனக் கேட்கிறார்கள். இதை கண்டுபிடிப்பது யாருடைய பொறுப்பு?. எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் துறையினர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றம் உத்தரவிட்டும் பாதுகாப்பு வழங்கவில்லையே. எந்த கட்சிக்கு விருப்பமோ, அந்த கட்சிக்கு வாக்களியுங்கள்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil