எஸ்.வி.சேகரின் ஜெயில் ஆசையை அதிமுக நிறைவேற்றும்! – ஜெயக்குமார் எச்சரிக்கை!

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (13:39 IST)
எஸ்.வி.சேகர் சிறைக்கு செல்ல ஆசைப்பட்டால் அதிமுக அவரது ஆசையை நிறைவேற்றும் என அமைச்சர் ஜெயக்குமார் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்ட பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் தேசிய கொடி குறித்தும், தமிழக முதல்வர் குறித்தும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. கூட்டம் ஒன்றில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி “எஸ்.வி.சேகர் வழக்கு தொடர்ந்தால் ஓடி ஒளிந்து கொள்வார்” என பேசியிருந்த நிலையில், முதல்வர் குறித்து எஸ்.வி.சேகர் அவதூறாக பேசியதாக சென்னை குற்றவியல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒருமுறை இவ்வாறாக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு எஸ்.வி.சேகர் தலைமறைவான நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் “எஸ்.வி.சேகர் தேசிய கொடியை அவமதித்ததும், முதல்வர் குறித்து அவதூறாக பேசியதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. எஸ்.வி.சேகர் நீண்ட காலமாக சிறை செல்ல ஆசைப்படுகிறார். அவரது ஆசையை அதிமுக நிறைவேற்றும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments