Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை அவமானப்படுத்திய திமுகவுடன் தினகரன்; ஜெயக்குமார் விளாசல்

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2017 (13:31 IST)
சட்டசபையில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை அவமானப்படுத்தி ஜனநாயகப் படுகொலை செய்த திமுக ஜனநாயகப் படுகொலை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் திமுகவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.


 

 
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
 
திமுக முதலில் தன் முதுகில் உள்ள அழுக்கை தெரிந்து கொள்ள வேண்டும். சட்டசபையில் எம்.ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை அவமானப்படுத்தி வரலாற்றில் மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை செய்த திமுக, எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் ஜனநாயகப் படுகொலை என சொல்வது வேடிக்கையாக உள்ளது.
 
ஆட்சியை கவிழ்க்க வேண்டுமென்று ஸ்டாலினும், தினகரனும் கைகோர்த்து செயல்படுகிறார்கள். யார் யாருடன் சேர்ந்தாலும் எந்த கொம்பனாலும் ஆட்சியை ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது. ஸ்டாலினும், தினகரனும் கோயபல்ஸ் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடாது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் திமுகவினருக்கு, இந்தி எது ஆங்கிலம் எது என்று கூட தெரியாதா? அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments