Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்களும் தேர்தல் வேலைகளில் பிசி தான்: ஜெயகுமார்!

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (15:48 IST)
திமுகவின் தேர்தல் பிரச்சார பணிகள் குறித்து அதிமுக அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
 
தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளன. இந்நிலையில் இன்னமும் கூட்டணிகளே முடிவாகாத நிலையிலும் திமுக தனது தேர்தல் பிரச்சார பணியை தொடங்கிவிட்டது. 
 
இந்நிலையில் திமுகவின் தேர்தல் பிரச்சார பணிகள் குறித்து அதிமுக அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியதாவது,  மக்களோடு மக்களாக இருக்கும் இயக்கமே அதிமுக. தேர்தல் வந்தால் மீண்டும் அதிமுகவை அரியணையில் ஏற்ற மக்கள் தயாராக உள்ளனர். சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அதிமுக செய்து வருகிறது.
 
பிரசாந்த் கிஷோர் எழுதித் தரும் புதுப்புது தலைப்புகளில் என்ன செய்தாலும்,  திமுகவால் தேர்தலில் சாதிக்க முடியாது. கனிமொழி உள்ளிட்டோர் இமயமலையில் இருந்து கன்னியாகுமரி வரை பிரச்சாரம் செய்தாலும் அதிமுக கவலைப்படாது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments