பிரச்சாரத்திற்கு போன இடத்தில் நாய்க்குட்டியோடு விளையாட்டு! – அமைச்சரின் ஜெயக்குமார் புகைப்படம் வைரல்!

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (09:14 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சாரம் சென்ற இடத்தில் நாய்க்குட்டியோடு விளையாடிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் ராயப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமாரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அமைச்சர்களிலேயே ஜாலியான அமைச்சராக அறியப்படும் ஜெயக்குமார் விழாக்களில் எம்.ஜி.ஆர் பாடலை மேடையில் பாடுவது, குத்துச்சண்டை வீரர்களோடு குஸ்தி போடுவது என குறும்பாக செய்யும் பல விசயங்கள் இதற்கு முன் வைரலாகியுள்ளன. அந்த வகையில் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் சென்ற ஜெயக்குமார் அங்கு இருந்த நாய்க்குட்டி ஒன்றை தூக்கி கொஞ்சி விளையாடியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

வங்கக் கடலில் தாழ்வு மண்டலம்.. 16 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை !

தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் 5000 ரூபாய்க்கு கூட கிடைக்கிறது: சேலம் கொலை குறித்து அன்புமணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments