அதிமுக ஆட்சி தொடர்வதை அமைச்சர் ஜெயகுமாரே விரும்பவில்லை: துரைமுருகன்

Webdunia
ஞாயிறு, 20 ஜனவரி 2019 (07:20 IST)
அதிமுக ஆட்சி தொடர்வதை திமுக எம்.எல்.ஏக்களே விரும்புகின்றனர் என்று சமீபத்தில் மீன்வளத்துறை அமைச்சர் பேட்டி ஒன்றில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் இதற்கு விளக்கமளித்த அமைச்சர், திமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் எம்.எல்.ஏ பதவியை காப்பாற்றி கொள்ள அதிமுக ஆட்சி தொடர்வதை விரும்பினர் என்ற அர்த்தத்தில் கூறியதாக கூறினார்.

இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விருதம்பட்டை சேர்ந்த  அ.தி.மு.க. முன்னாள் மாமன்ற உறுப்பினர் நித்தியகுமார் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட திமுக பொருளாளர் துரைமுருகன், 'அதிமுக ஆட்சி தொடர்வதை அமைச்சர் ஜெயகுமாரே விரும்பவில்லை என்பது தனக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.

தற்போது அமைச்சர் ஜெயகுமார் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்காப்பட்டுள்ளதாகவும், இதனால் மிகுந்த மனவருத்தத்தில் உள்ள ஜெயகுமார் இந்த ஆட்சி எப்போது போகும் என்று நினைப்பதாகவும் துரைமுருகன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments