Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெட்டிசன்களின் கிண்டல் எதிரோலியாக மாற்றங்கள் செய்யப்படும் ஜெ. சிலை

Webdunia
ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (13:06 IST)
அமைச்சர் ஜெயக்குமார் ஜெயலலிதாவின் சிலையில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
 
ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் 70 அடி உயர வெண்கல சிலை திறக்கப்பட்டது. அந்த சிலையில் உள்ள உருவம் ஜெயலலிதாவைப் போல இல்லை என்ற கருத்து எழுந்துள்ளது. 
 
இதை வைத்து நெட்டிசன்கள் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் மீம்ஸ் போட்டு வந்தனர். மேலும் ஜெ. உருவ சிலையை வளர்மதி, எடப்பாடி பழனிச்சாமி மனைவி, நடிகை காந்திமதி, நிர்மளா பெரியசாமி ஆகியோர் போன்று உள்ளது என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
 
இந்த கருத்துக்கு ஜெயக்குமார் அளித்த பதிலில் ”ஜெ.வின் சிலையை மற்றவர்களுடன் ஒப்பிடுபவர்கள். மனசாட்சி இல்லாத மிருகங்கள்தான்” என ஆவேசமாக பதிலளித்தார்.
 
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிவிப்பில் , ஜெயலலிதா சிலையில் சில மாற்றங்கள் செய்ய அந்த சிலையை செய்த சிற்பி மீண்டும் அழைக்கப்பட உள்ளார் என்று அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments