Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர்கள் சமூக அக்கறையுடன் செயல்படவேண்டும் - விஜய்க்கு ஜெயக்குமார் அறிவுரை

Webdunia
சனி, 7 ஜூலை 2018 (13:46 IST)
நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் போஸ்டர் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

 
சர்கார் பட போஸ்டர் கடந்த மாதம் 21ஆம் தேதி வெளியானது. அதில் ஒரு போஸ்டரில் விஜய் புகைபிடிப்பது போன்ற ஒரு புகைப்படம் இடபெற்றிருந்தது. இந்த புகைப்படத்திற்கு அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. முக்கியமாக பாமக இளைஞர் அணி தலைவர், அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார்.  
 
மேலும், புகைபிடித்தபடி விஜய் இருக்கும் படங்களை உடனே இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் பொது வெளியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது.  
 
எனவே, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து சர்கார் படத்தின் புகைப்பிடிக்கும் போஸ்டரை நீக்கியுள்ளது.
 
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் “நடிகர்கள் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர் சிகரெட் பிடிக்கும் காட்சியிலோ, மது அருந்தும் காட்சியிலோ நடிக்க மாட்டார். அதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்” என அறிவுரை செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக அரசின் சாயம் வெளுக்கிறது.. விஜய் கட்சி நிர்வாகி நடிகர் ராஜ்மோகன் அறிக்கை..!

எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்த ராஜேந்திர பாலாஜி.. மன்னிப்பு கேட்டாரா?

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் தேதி.. நாசா அறிவிப்பு..!

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய எக்ஸ் வலைத்தளம்.. என்ன ஆச்சு?

ஹோலி பண்டிகை அன்று முஸ்லிம்கள் வெளியே வர வேண்டாம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

அடுத்த கட்டுரையில்
Show comments