தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெற முதல்வர் ஜெயலலிதா உரிய நடவடிக்கை எடுக்கவி்லை என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து, மதிமுக பொது செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டி.இந்த விளையாட்டுப் போட்டி நடைபெறாமல் போனதற்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தான் காரணம்.
அப்போது, காங்கிரஸ் கூட்டணியில் திமுகவும், பாமகவும் தான் இருந்தன. அப்போது வாய் மூடி இருந்துவிட்டு தற்போது அரசியலுக்காக ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என அந்தக் கட்சிகள் பேசுவது அபத்தம்.
அதேபோல், அதிக எம்.பி.க்களை கொண்டுள்ள அதிமுகவும் ஜல்லிக்கட்டி நடைபெற உரிய முயற்சி செய்யவில்லை. வெறும் கடிதம் மட்டும் ஜெயலலிதா எழுதிவருகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.