Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்னீர்செல்வத்தை பாராட்டிய பன்னீர்செல்வம்: திமுக எதிர்ப்பு!

Webdunia
செவ்வாய், 9 ஜனவரி 2018 (13:49 IST)
தமிழக சட்டசபையில் கலசபாக்கம் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என புகழ்ந்து பேசினார். இதற்கு திமுகவின் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இரண்டாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய கூட்டத்தின் கேள்வி நேரத்தின் போது, கலசபாக்கம் தொகுதி எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் முதல்வரையும், துணை முதல்வரையும் பாராட்டி பேசினார்.
 
அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என குறிப்பிட்டார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கேள்வி நேரத்தின் போது யாரையும் பாராட்டி பேசக்கூடாது, அது சபை விதிமுறையல்ல என கூறினார்.
 
உடனே எழுந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எல்லா பாராட்டுக்கும் உரியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மட்டுமே, என்னை யாரும் பாராட்டி பேச வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய பெண் போலீஸ்.. நெகிழ்ச்சி சம்பவம்..!

ஒரு சொல்லுக்கு பொருள் தெரியாதவரை கவிப்பேரரசு என அழைப்பதா? வைரமுத்துவுக்கு பாஜக கண்டனம்..!

மீண்டும் எடப்பாடியுடன் இணைய திட்டமா? டிடிவி தினகரன் கூறிய பதில்..!

இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

முன்னேற்றத்தை பாத்து வயிற்றெரிச்சல்! அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்! - அமெரிக்காவுக்கு வெங்கயா நாயுடு கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments