Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்னீர்செல்வத்தை பாராட்டிய பன்னீர்செல்வம்: திமுக எதிர்ப்பு!

Webdunia
செவ்வாய், 9 ஜனவரி 2018 (13:49 IST)
தமிழக சட்டசபையில் கலசபாக்கம் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என புகழ்ந்து பேசினார். இதற்கு திமுகவின் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இரண்டாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய கூட்டத்தின் கேள்வி நேரத்தின் போது, கலசபாக்கம் தொகுதி எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் முதல்வரையும், துணை முதல்வரையும் பாராட்டி பேசினார்.
 
அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என குறிப்பிட்டார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கேள்வி நேரத்தின் போது யாரையும் பாராட்டி பேசக்கூடாது, அது சபை விதிமுறையல்ல என கூறினார்.
 
உடனே எழுந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எல்லா பாராட்டுக்கும் உரியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மட்டுமே, என்னை யாரும் பாராட்டி பேச வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments