Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாட்டிறச்சி உண்பவர்கள் எப்படி ஜல்லிக்கட்டு ஆதரவாளராக இருக்க முடியும்: போராட்டத்தை திசை திருப்பும் எச்.ராஜா!

மாட்டிறச்சி உண்பவர்கள் எப்படி ஜல்லிக்கட்டு ஆதரவாளராக இருக்க முடியும்: போராட்டத்தை திசை திருப்பும் எச்.ராஜா!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2017 (16:32 IST)
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர் பட்டாளத்தால் நிரம்பி வழிகிறது.


 
 
பல்வேறு தரப்பினரும் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மாட்டிறச்சி சாப்பிடுபவர்கள் எப்படி ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களாக இருக்க முடியும் என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எச்.ராஜா, காளைகளை கொன்று அதன் இறச்சியை உண்பவர்கள் எப்படி ஜல்லிக்கட்டு காதலர்களாக இருக்க முடியும் என எனக்கு தெரியவில்லை. அவர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ள மாணவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

 
எச்.ராஜாவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்துக்கு போராட்டக்களத்தில் இருக்கும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் எச்.ராஜா மாட்டிறச்சி பற்றி பேசி போராட்டத்தை திசை திருப்ப பார்க்கிறார் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

கல்லூரி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 2 ஆசிரியர்கள்.. வேலியே பயிரை மேய்ந்த கொடுமை..!

பாசமாய் பழகிய பிக்காச்சு பரிதாப மரணம்! நாய்க்கு கல்வெட்டு வைத்த ஊர் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments