Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் தலையிட முடியாது : உயர் நீதிமன்றம்

மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் தலையிட முடியாது : உயர் நீதிமன்றம்
, புதன், 18 ஜனவரி 2017 (13:40 IST)
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்ககோரி தமிழகமெங்கும் போராட்டம் அதிகரித்து வருகிறது. கல்லூரி மாணவர்க்ள் மட்டுமின்றி பொதுமக்களும் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர். அலங்கா நல்லூரில் துவங்கிய போராட்டம் இன்று தமிழகமெங்கும் தீவிரமடைந்துவருகிறது.




இதையடுத்து ஜல்லிக்கட்டு விவகாரத்தில் முதல்வர் பன்னீர் செல்வம் தமிழக காவல்துறை முக்கிய அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திவருகிறார்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பாமகவைச் சேர்ந்த பாலு தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு  நிலுவையில் உள்ளதால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுகவை சுக்கு நூறாக்க நடராஜன், திவாகரன் போதும்: ஹெச்.ராஜா பதிலடி