Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெய்ராம் ரமேஷ் கருத்து முட்டாள்தனமானது: சரத்குமார் கண்டனம்

ஜெய்ராம் ரமேஷ் கருத்து முட்டாள்தனமானது: சரத்குமார் கண்டனம்
, ஞாயிறு, 10 ஜனவரி 2016 (23:39 IST)
ஜல்லிக்கட்டு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறிய கருத்து முட்டாள்தனமானது என சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு வருடமும்  ஜல்லிக்கட்டு மிகச் சிறப்பாக நடைபெறும். ஆனால், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தான் ஜல்லிக்கட்டிற்கு தடை போட்டது.
 
அதனால், சென்ற வருடம் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிகட்டு தமிழ்நாட்டில் நடைபெறவில்லை. ஆனால் இந்த வருடம் ஜல்லிகட்டு நடைபெற வேண்டும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் ஒட்டு மொத்த குரல் எழுப்பி வருகின்றனர்.
 
இதில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் தீவிர முயற்சியால் தான் , ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டது என்பது உலகம் அறிந்த விஷயம். இந்த அறிவிப்பு பொது மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி காட்டுமிராண்டித்தனம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார். இது முட்டாள்தனமான கருத்து. ஜெய்ராம் ரமேசை காங்கிரஸ் கட்சியிலிருந்து சோனியா காந்தி நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil