Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கைதிகளை மோசமாக நடத்தும் கோவை சிறை அதிகாரிகள்; வாட்ஸ் அப் வீடியாவால் அம்பலம்

கைதிகளை மோசமாக நடத்தும் கோவை சிறை அதிகாரிகள்; வாட்ஸ் அப் வீடியாவால் அம்பலம்
, வியாழன், 16 ஏப்ரல் 2015 (15:52 IST)
கோவை சிறையில் கைதிகளை மோசமாக நடத்தும் வீடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில் வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகளை கைதி ஒருவர் தெரியாமல், செல்போனில் பதிவு செய்ததாகத் தெரிகிறது. அதில் தனிமை சிறைகளில் கைதிகள் அடைக்கப்பட்டு இருப்பதும், அந்த சிறைகளிலேயே உணவு உண்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.
 

 
மேலும், தரையில் தண்ணீர் தேங்கியிருப்பதால் தூங்க முடியாமல் கைதிகள் சிரமப்படுவது போலும் வெளியாகி உள்ளது. அதை விட முக்கியமாக, சிறை வளாகத்தில் கைதிகளை தனிமை சிறைகளில் உள்ளாடைகளுடன் அடைக்கப்பட்டுள்ள போன்ற காட்சிகளும் வெளியாகிவுள்ளது.
 
இது போன்ற தனிமை சிறைகளில் அடைக்கப்பட்ட கைதிகளை பார்க்க உறவினர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் சிறை நிர்வாகம் அனுமதி அளிப்பதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. இதனால், கோவை மத்திய சிறையில் மனித உரிமை மீறல் அதிகம் நடப்பதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil