Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதெல்லாம் ஒரு வசதியா? சசிகலா பகடைக்காய்: திவாகரன் மகன் ஜெயானந்த் அதிரடி!

இதெல்லாம் ஒரு வசதியா? சசிகலா பகடைக்காய்: திவாகரன் மகன் ஜெயானந்த் அதிரடி!

Webdunia
வியாழன், 13 ஜூலை 2017 (16:49 IST)
சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுத்து சிறைத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா கூறியது தமிழக மற்றும் கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.


 
 
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு விதிகளை வளைத்து சிறப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக சிறைத்துறை டிஐஜி ரூபா அம்மாநில டிஜிபி தத்தாவுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். இதனையடுத்து பேட்டியளித்த அவர் அதற்கான ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாக கூறினார்.
 
இந்நிலையில் இதுகுறித்து விசாரிக்க அம்மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இதனால் சசிகலா மீது சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து விதிகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த் டிஐஜி ரூபாவுக்கு அந்த மாநில சிறை துறை டிஜிபி இரு முறை மெமோ கொடுத்துள்ளார். அந்த குற்றச்சாட்டை திசைத்திருப்ப சசிகலாவை பகடைக்காயாக்குகிறார் என்றார். மேலும் தண்ணீர், உணவு, படுக்கை வசதி அளிக்கப்படுவதை சிறப்பு வசதி என்று குற்றம்சாட்டினால் என்ன சொல்வது என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments