Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் ஆபத்தானதுதான்.. அதையும் தடை செய்யுங்கள் - ஜக்கி வாசுதேவ் காட்டம்

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2017 (16:51 IST)
ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட வேண்டும். மேலும், பீட்டா நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என தமிழகம் எங்கும் உள்ள கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், ஐ.டி. ஊழியர்கள் என பலரும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக அமைதியான வழியில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.


 

 
சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற போராட்டம் தற்போது தமிழகமெங்கும் தீவிரமடைந்துள்ளது. ஆண்கள் மட்டுமே போராடி வந்த இந்த போராட்டங்களில் தற்போது ஏராளமான இளம் பெண்களும் கலந்து கொண்டு போராடி வருகின்றனர். 
 
இந்நிலையில் இதுபற்றி  கருத்து தெரிவித்துள்ள சத்குரு ஜக்கி வாசுதேவ் “கிரிக்கெட் கூட உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் ஒரு விளையாடுதான். அந்த விளையாட்டில் பந்து பட்டு பலர் உயிர் இழந்தனர். அப்படிப் பார்த்தால் கிரிக்கெட்டையும் தடை செய்ய முடியுமா?” என அவர் கேள்வி எழுப்பினார். மேலும் தமிழகத்தில், ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments