Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாமீன் வழங்கிய பிறகும் வெளியே விடாமல் வைத்திருப்பது சட்டவிரோதம்.. ஜாபர் சாதிக் மனுதாக்கல்..!

Mahendran
வியாழன், 12 செப்டம்பர் 2024 (10:33 IST)
சட்ட விரோத பண பரிமாற்ற தடை வழக்கில் ஜாமீன் வழங்கிய பின்னும் தன்னை சிறையில் அடைத்தது சட்டவிரோதம் என்று கூறி ஜாபர் சாதிக் மனுதாக்கல் செய்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

போதை பொருள் கடத்தல் வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரை அமலாக்கத்துறை அதிகாரிகளும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை தன்னை சிறையில் வைத்தது சட்டவிரோதம் என்றும் எனவே விடுவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஜாபர் சாதிக் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இது தொடர்பாக திகார் சிறைத்துறை நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து மனுதாரர் நிவாரணம் தேடிக் கொள்ளலாம் என்றும் அவர் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வந்தே பாரத் ரயில் கிளம்புவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் டிக்கெட் எடுத்தால் அபராதம்.. பயணிகள் அதிருப்தி..!

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த ரயில் தடம் புரண்டு விபத்து.. பயணிகள் அதிர்ச்சி..!

போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்: வாடிகன் அறிவிப்பால் அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

இன்று ஒரே நாளில் 32 மீனவர்கள் கைது. இலங்கை கடற்படை தொடர் அட்டகாசம்..!

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments