Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அளவில் திராவிடத்தின் வாரிசு நான் மட்டுமே: தீபா

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (17:05 IST)
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று காலை தனது முகநூலில் பெரியாரின் சிலையை உடைப்பேன் என்று பதிவு செய்த கருத்துக்கு திட்டாத அரசியல்வாதியே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்ப்புக்குரல் ஏற்பட்டதால் பின்வாங்கிய எச்.ராஜா, தனது முகநூல் பதிவை நீக்கிவிட்டார்

இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபாவும் தன்னுடைய முறைக்கு எச்.ராஜாவை விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பெரியார் மண்ணிலிருந்து பெரியார் சிலையை அகற்றி விட முடியுமா ? வெறும் சிலை இல்லை, சிங்கம் அவர்...சிலையை தொட்டால் ஏற்படும் விளைவுகள் நினைத்து பார்க்க முடியாதவை..இந்திய அளவில் திராவிடம் காத்த அம்மாவின் வாரிசு நான் வெறுமனே பார்த்து கொண்டு இருக்க மாட்டேன்..என்று கூறியுள்ளார்.

எச்.ராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது சரிதான். ஆனால் இந்திய அளவில் திராவிடம் காத்த அம்மாவின் வாரிசு நான் என்று தீபா கூறியதை எங்களால் ஜீரணித்து கொள்ளவே முடியவில்லை என்று நெட்டிசன்கள் மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இன்று காலையில் இருந்தே மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நல்ல வேட்டை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments