Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கியதால் டார்ச்சர்: சென்னை ஐ.டி. ஊழியர் தற்கொலை!

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2022 (12:54 IST)
ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை கேகே நகர் என்ற பகுதியைச் சேர்ந்த நரேந்திரன் என்ற 23 வயது இளைஞர் ஐடி துறையில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஆன்லைன் செயலியில் கடன் ஒரு சில ஆயிரம் மட்டுமே வாங்கியதாகவும், ஆனால் அந்த கடனுக்காக பல ஆயிரம் கட்டியதாகவும் இருப்பினும் திரும்பத் திரும்ப மீண்டும் கடனை கட்ட சொல்லி அவருக்கு செல்போன் மூலம் மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
 
மேலும் அவரது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கடனை கட்டும்படி ஆன்லைன் செயலி நிர்வாகத்தினர் மிரட்டியதாகவும் இதனை அடுத்து நரேந்திரன் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் திடீரென நரேந்திரன் தனது பெற்றோர் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது செல்போனை கைப்பற்றிய போலீசார் நரேந்திரனை தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் வரிவிதிப்பு எதிரொலி: ஆசிய பங்குச்சந்தை எழுச்சி.. ஐரோப்பிய பங்குச்சந்தை வீழ்ச்சி..!

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

நேற்று ‘தியாகி’ பேட்ஜ்.. இன்று கருப்பு சட்டை.. அதிமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு..!

வயது மூத்த பெண்ணோடு தகாத உறவு! சேர்ந்து வாழ விட மாட்றாங்க..! தூக்கில் தொங்கிய காதல் ஜோடி!

தங்கம் விலை மீண்டும் சரிவு.. ரூ.66 ஆயிரத்திற்கும் கீழ் வந்த ஒரு சவரன் விலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments