Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை - வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2017 (19:23 IST)
வங்கக் கடலின் அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தின் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அந்த தாழ்வுநிலை அதே இடத்தில் நிலை கொண்டு படிப்படியாக வலுவடைந்து அடுத்த 48 மணி நேரத்தில் புயல் சின்னமாக மாற வாய்ப்புள்ளது. 
 
அந்த புயல் தமிழகத்திலிருந்து விலகிச் செல்லும் போது, அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும். இதனால் நாகை, பாம்பன் ஆகிய இரண்டு துறைமுகங்களிலும் 1ம் எண் புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.
 
அதேபோல், இந்த புயல் தரைப்பகுதியில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சு விடும் என்பதால், வட தமிழகம், தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும்” என அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments