கடலோர மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (17:02 IST)
தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.


 

 
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் விளைவாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னை, கடலூர், நாகை, திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வந்தது.  ஆனால், நேற்று முதல் தமிழகத்தில் பெரிதாக எங்கும் மழை பெய்யவில்லை. இன்றும் தமிழகத்தின் பல இடங்களில் வெயில் அடிக்கிறது. 
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் “அரபிக்கடலில் கேரளா பகுதியில் உருவாகியுள்ள மேல் அடுக்கு சுழற்சியால், கேரள எல்லையில் உள்ள தமிழக பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புண்டு. தென் மாவட்டங்களில் பல இடங்களில் மிதமான மழை இருக்கும். ஆனால், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தார். 
 
அதேபோல், இந்திய வானிலை மையம் நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் “அந்தமான் தீவுகளில் இன்று கனமழை பெய்யும். மற்ற இடங்களுக்கு வருகிற 12ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை எதுவுமில்லை” என தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில் இந்திய வானிலை மையம் தற்போது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘ தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்பிருக்கிறது” என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments