Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலோர மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (17:02 IST)
தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.


 

 
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் விளைவாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னை, கடலூர், நாகை, திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வந்தது.  ஆனால், நேற்று முதல் தமிழகத்தில் பெரிதாக எங்கும் மழை பெய்யவில்லை. இன்றும் தமிழகத்தின் பல இடங்களில் வெயில் அடிக்கிறது. 
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் “அரபிக்கடலில் கேரளா பகுதியில் உருவாகியுள்ள மேல் அடுக்கு சுழற்சியால், கேரள எல்லையில் உள்ள தமிழக பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புண்டு. தென் மாவட்டங்களில் பல இடங்களில் மிதமான மழை இருக்கும். ஆனால், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தார். 
 
அதேபோல், இந்திய வானிலை மையம் நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் “அந்தமான் தீவுகளில் இன்று கனமழை பெய்யும். மற்ற இடங்களுக்கு வருகிற 12ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை எதுவுமில்லை” என தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில் இந்திய வானிலை மையம் தற்போது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘ தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்பிருக்கிறது” என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments