Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழியர்களுக்கு, work from home வழங்க மறுக்கும் ஐடி நிறுவனங்கள்

Mahendran
திங்கள், 14 அக்டோபர் 2024 (16:49 IST)
சென்னைக்கு மிகப்பெரிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சில ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை நேரடியாக அலுவலகத்திற்கு வரும்படி வற்புறுத்துகின்றன.
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சற்றுமுன் வரவிருக்கும் 4 நாட்களுக்கு work from home முறையை கடைபிடிக்குமாறு ஐடி நிறுவனங்களை அறிவுறுத்தியிருந்தாலும், சென்னையின் ஓ.எம்.ஆர், ஈ.சிஆர், தரமணி பகுதிகளில் உள்ள பல ஐடி நிறுவனங்கள் இதுவரை அதற்கான உத்தரவை அறிவிக்கவில்லை.
 
அதே நேரத்தில், மின்சார பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் பராமரிப்பு போன்ற வேலைகள் இந்த  பகுதிகளில் நடைபெற்று வருவதால், ஊழியர்களின் பயணம் இன்னும் சிரமமானதாகவே உள்ளது.
 
ஓ.எம்.ஆர், ஈ.சிஆர், தரமணி சாலைகளில் சாதாரண நாட்களிலேயே வாகன நெரிசல் அதிகம் காணப்படும் நிலையில், இப்போது மழை காரணமாக அந்த சாலைகளில் நிலைமை மேலும் மோசமாகலாம். எனவே ஐடி ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதில் பெரும் சிரமம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மட்டும் தான் தமிழகமா? முதல்வர், துணை முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

கனமழை எச்சரிக்கை: சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி கலந்தாய்வு தேதி ஒத்திவைப்பு..!

மகாராஷ்டிரா பல்கலைக்கழகத்துக்கு ரத்தன் டாடா பெயர்: மாநில அரசு அறிவிப்பு

கருணாநிதி குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு..!

2025 ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை: மாசு கட்டுப்பாட்டு குழு

அடுத்த கட்டுரையில்
Show comments