வரும் மே 16-ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகளால் அதிகமாக முன் வைக்கப்படும் வாக்குறுதி மதுவிலக்கு. மதுவிலக்கு பற்றி பேசாத கட்சிகளே இல்லை எனலாம்.
இந்நிலையில் புதுச்சேரியில் மதுவிலக்கு குறித்த கேள்விக்கு அம்மாநில முதல்வர் ரங்கசாமி பதில் அளிக்காமல் சென்றார். புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். பாமக தனது தேர்தல் அறிக்கையில் புதுச்சேரியில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கூறியுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வரும் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்துப்படும் என கூறப்பட்டு வருகிறது. அது போல் புதுச்சேரியிலும் மதுவிலக்கு அமல்படுத்த சாத்தியம் உள்ளதா என கேள்வியெழுப்பினார். ஆனல் முதல்வர் ரங்கசாமி இந்த கேள்விக்கு பதில் சொல்ல மறுத்துவிட்டு சென்றுவிட்டார்.