Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ.ஆர்.முருகதாஸ் கைதா? வீட்டின் முன் போலீஸ் குவிந்ததால் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2018 (05:43 IST)
நேற்று நள்ளிரவில் சர்கார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டின் முன் போலீஸார் குவிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் பிரச்சனை நேற்று உச்சத்திற்கு சென்ற நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழுவினர் ஒப்புக்கொண்டனர். இன்று மதியம் மறு தணிக்கை செய்யப்பட்டு புதிய பொலிவுடன் சர்கார் திரைப்படம் திரையரங்கில் திரையிடப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேவராஜன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக வதந்தி பரவியது. இதனை உறுதி செய்வதை போல் அவருடைய சாலிகிராமம் வீட்டின் முன் போலீசார் குவிந்தனர். ஆனால் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தாங்கள் வரவில்லை என்றும், அவருடைய வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்கவே வந்ததாகவும் காவல்துறையினர் விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், ' காவல் துறையினர் எனது வீட்டின் கதவை பலமுறை தட்டினர். நான் தற்போது வீட்டில் இல்லை. தற்போது எந்த காவலரும் எனது வீட்டின் முன்பு இல்லை என  பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments