Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்: போர் ஆரம்பமா?

Mahendran
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (11:18 IST)
ஈரான் மீது நள்ளிரவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஞாயிறு அன்று இஸ்ரேல் மீது ஈரான் குண்டுகளை வீசியதை அடுத்து இரு நாடுகளுக்கு இடையே போர் உருவாக வாய்ப்பிருப்பதாகவும் அது மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கும் என்றும் அச்சம் எழுந்தது

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும் இதனை அமெரிக்கா உறுதி செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

மேலும் இந்த தாக்குதல் காரணமாக பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் காரணமாக ஈரான் நாட்டில் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை அடுத்து இரு நாடுகளுக்கு இடையே போர் வரும் என்ற அச்சம் ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு புறம் தங்கம் , பெட்ரோல் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகள் மோசமாக சரிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments