Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறுத்து பார்த்த மக்கள் கோட்டை நோக்கி வருகின்றனர்! – தலைமை செயலாளர் இறையன்பு கடிதம்!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (10:40 IST)
மக்கள் பிரச்சினைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்து வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவு இயங்கி வரும் நிலையில் நாள்தோறும் மக்கள் பலர் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க தலமை செயலகம் வருவது அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ள தமிழக தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட அளவில் மனு அளித்து பொறுத்து பொறுத்து பார்த்த மக்கள், நடவடிக்கை எடுக்காததால் குக்கிராமங்களில் இருந்து கோட்டையை நோக்கி புறப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

கனவுகள் நிறைந்த கண்களோடும், கவலைகள் நிறைந்த இதயத்தோடும், கோட்டையில் மக்கள் காத்திருப்பதை பார்க்கும் போது மனம் கனப்பதாக தெரிவித்துள்ள அவர் மக்கள் பிரச்சினைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்து வைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments