Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதி கொலை வழக்கு: தமிழச்சி கூறியதை ஏன் பரிசீலனை செய்யக்கூடாது? ராமராஜ் வலியுறுத்தல்

சுவாதி கொலை வழக்கு: தமிழச்சி கூறியதை ஏன் பரிசீலனை செய்யக்கூடாது? ராமராஜ் வலியுறுத்தல்

Webdunia
சனி, 13 ஆகஸ்ட் 2016 (16:00 IST)
சுவாதி கொலை வழக்கில் உண்மையான குற்றாவளி குறித்து தமிழச்சி கூறிய கருத்தின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை செய்ய வேண்டும் என்று ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராமராஜ் வலியுறுத்தியுள்ளார்.


 

 
தமிழச்சி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் உண்மை குற்றவாளி இல்லை. கொலையாளி முத்துக்குமார் சுவாதியின் சித்தப்பாவின் பாதுகாப்பில் வசதியாக உள்ளான். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது என்று கூறியிருந்தார்.
 
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராமராஜ், தமிழச்சி கூறியதற்கு, சுவாதி குடும்பத்தினர் தரப்பில் இருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
 
அதனால் தமிழச்சி கூறிய கருத்தின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை செய்ய வேண்டும் என்று கூறினார். 
 
மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்ற 17ஆம் தேதி ராம்குமாரின் தாயார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்   
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கு கவிதை.. துலாரி தேவி கொடுத்த சேலை அணிந்து பட்ஜெட் உரையை தொடங்கிய நிர்மலா சீதாராமன்..!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. இன்றும் உயர்ந்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!

பக்தர்களை ஆபாசமாக திட்டிய திருப்பதி கோவில் தேவஸ்தான ஊழியர்.. அதிரடி நடவடிக்கை..!

சிறைக்கைதியுடன் மசாஜ் சென்டர் சென்ற காவலர்கள்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

இன்று முதல் அமல்படுத்தப்படும் யு.பி.ஐ., புதிய விதிகள்.. பண பரிவர்த்தனை செய்ய என்னென்ன கட்டுப்பாடு?

அடுத்த கட்டுரையில்
Show comments