Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவின் தரம் குறித்த நுகர்வோர் புகார்களைப் பெற்று தீர்வு காணும் ஒரு செயலி மற்றும் இணையதளம் அறிமுகம்

Webdunia
புதன், 7 ஜூன் 2023 (21:05 IST)
தமிழகத்தில் உணவின் தரம் குறித்த நுகர்வோர் புகார்களைப் பெற்று உடனடியாக தீர்வு காணும் வகையில் ஒரு செயலியும் இணையதளமும்  இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில்  முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு  நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றது முதல்  திமுக அரசு பல திட்டங்களை  அறிமுகம் செய்து வருகிறது.

இந்த நிலையில், உணவின் தரம் குறித்த நுகர்வோர் புகார்களைப் பெற்று உடனடியாக தீர்வு காணும் வகையில் ஒரு செயலியும் இணையதளமும்  இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அமைச்சர் சக்கரபாணி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’உணவின் தரம் குறித்த நுகர்வோர் புகார்களைப் பெற்று உடனடியாக தீர்வு காணும் வகையில் TN Food safety consumer app எனும் செயலியும், https://foodsafety.tn.gov.in எனும் இணையதளமும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முழுமையான உணவு பாதுகாப்பை உறுதி செய்வதில் தரமான உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டியது அவசியம். அத்தகைய முழுமையான உணவு பாதுகாப்பை நோக்கி திராவிட மாடல் அரசு முனைப்புடன் செயல்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டமன்றத்தில் அமளி; அதிமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்! – சபாநாயகர் விளக்கம்!

300 கோடி மோசடி செய்த வழக்கு-கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3.20 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்த குற்றப்பிரிவு போலீசார்!

ஈஷாவில் களைக்கட்டிய உலக யோகா தின விழா! நூற்றுக்கணக்கான CRPF வீரர்கள் பங்கேற்பு!

இன்றும் நாளையும் கிரிவலம் நாள்.. தமிழக அரசு செய்த சிறப்பு ஏற்பாடுகள்..!

தமிழ்நாட்டில் 3 நாட்கள் அதி கனமழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments