Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நவம்பர் 2 ஆம் தேதி முதல் வேளாண்மை அலுவலர் பதவிக்கான நேர்காணல்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

நவம்பர் 2 ஆம் தேதி முதல் வேளாண்மை அலுவலர் பதவிக்கான நேர்காணல்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
, வியாழன், 22 அக்டோபர் 2015 (02:57 IST)
உதவி வேளாண்மை அலுவலர் பதவிக்கான நேர்காணல் நவம்பர் 2 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
 

 
இது குறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
 
தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணிக்குட்பட்ட உதவி வேளாண்மை அலுவலர், 2011-2012 பதவிக்கான எழுத்துத் தேர்வு ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்றது.
 
இந்த தேர்வில் 3236 விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர். இதில், விண்ணப்பதார்களின் மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதிபடி மற்றும் அரசு சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு, நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாகத் 795 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. வலைதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிட்டப்பட்டுள்ளது.
 
மேலும், இதற்கான நேர்காணல் நவம்பர் 2 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil