Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு விடுமுறை: காவல் ஆணையர் அறிவிப்பு..!

Webdunia
புதன், 8 மார்ச் 2023 (14:40 IST)
இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு விடுமுறை என மதுரை காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் அவர்கள் அறிவித்துள்ளார்.
 
 இன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மதுரையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை எடுக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் ஒருநாள் அனுமதியிடம் கூடிய விடுமுறையை மதுரையில் உள்ள பெண் காவலர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திர நாயர் அவர்கள் அறிவித்துள்ளார். 
 
பாலின சமத்துவத்தை சமுதாயத்தில் விதைக்க அடிப்படையில் இருந்தே மாற்றத்தை விதைக்க வேண்டும் என்றும் சர்வதேச மகளிர் தினத்தில் அனைத்து பெண்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments