தற்காலிக தகன மேடை: மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தல்

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (17:59 IST)
கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மயானத்தில் நீண்ட வரிசையில் பிணங்கள் அடக்கம் செய்ய காத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் ஒன்றை செய்து உள்ளது. இதன்படி இறந்தவர்களின் உடல்களை விரைவாக எரியூட்ட தற்காலிக தகன மேடை அமைக்க வேண்டும் என்றும் சடலங்களை எடுத்துச் சொல்லும் ஆம்புலன்ஸ்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது
 
மேலும் கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை கண்ணியமாக அடக்கம் செய்ய வேண்டும் என்றும் தேசிய மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு மயானங்களில் நீண்ட வரிசையில் இருப்பது குறித்த செய்திகள் வெளியானதை அடுத்து தேசிய மனித உரிமை ஆணையம் இந்த அறிவுறுத்தலை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் அரசியல் எதிரி இல்லையா? பாஜகவை மட்டும் விமர்சனம் செய்த விஜய்..!

6 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு: நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி எந்த வங்கிக்கு மாறும்?

Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments